சென்னை: சென்னை வடபழனி ஆண்டவர் கோயில் டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்த நிலையில் அமைச்சர் சேகர் பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். தரிசன டிக்கெட் விற்பனை செய்யும் ரேவதி, தரிசன டிக்கெட் சரி பார்த்து பக்தர்களை அனுப்பும் ஊழியர் சின்னத்தம்பி ஆகிய இருவர் பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டுள்ளார்.