நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒன்றிய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதியை பெற்றுத்தருவதை விட்டு, தமிழக அரசை குறை கூற அண்ணாமலைக்கு தகுதியில்லை. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேச்சை அதிகாரிகள் உள்பட யாரும் கேட்பதில்லை. புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க முடியாது என பாஜ அரசு அறிவித்துள்ளது. எனவே பாஜ கூட்டணியை விட்டு விலகி என்.ஆர்.காங்கிரஸ் போராட்டம் நடத்தினால் காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும், என்றார்.