×

ஊராட்சி தலைவியிடம் 10 பவுன் செயின் பறிப்பு

குடியாத்தம்: ஊராட்சி தலைவியிடம் 10 சவரன் செயின் பறித்த ஹெல்மெட் கொள் ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் இமகிரிபாபு. ஒன்றிய கவுன்சிலர். இவரது மனைவி மமதா(40). ராஜாகுப்பம் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார். இவர் நேற்றிரவு தனது வீட்டிற்கு வெளியே சாலையோரம் நின்றுகொண்டு பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக பைக்கில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 2 மர்ம நபர்கள் திடீரென மமதா அணிந்திருந்த 10 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் குடியாத்தம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Panchayat , A 10 pound chain was confiscated from the Panchayat Chairperson
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு