×

ஐஎஸ் தாக்குதலில் 8 அப்பாவிகள் பலி: ஈராக்கில் அட்டூழியம்

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து வடகிழக்கின் காலிஸ் நகரின் புறநகர் பகுதியில் காரில் பொதுமக்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த கார் மீது ஐஎஸ் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். தொடர்ந்து அங்கு கூடியிருந்த அப்பாவி மக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், சம்பவ இடத்திலேயே 8 பேர் பலியாகினர். மேலும் 7 பேர் படுகாயமடைந்ததாக நகரத்தின் மேயர் உதய் அல்-கத்ரன் தெரிவித்தார்.

ஈராக் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தாக்குதல் நடத்திய ஐஎஸ் தீவிரவாதிகளை தேடி வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே, ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்க ஈராக் பாதுகாப்புப் படையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பொதுமக்கள் மீது கொரில்லா தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Iraq , 8 Innocents Killed in IS Attack: Atrocity in Iraq
× RELATED 85 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஈராக், சிரியா மீது அமெரிக்கா தாக்குதல்