சென்னை: கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ரூ.255.64 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலைநகர் பேரூராட்சி, 10 ஊராட்சியில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் 1.28 லட்சம் மக்கள் பயன்பெறுவர்.