×

 மோடி-புடின் பேச்சு அமெரிக்கா வரவேற்பு

வாஷிங்டன்:  உக்ரைன் மீதான போர் தொடர்பாக பிரதமர்  மோடியின் நிலைப்பாட்டை அமெரிக்கா மீண்டும் வரவேற்றுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மீண்டும் உக்கிரமடைந்திருக்கிறது. நேற்று முன்தினம் மட்டும் 70 ஏவுகணைகளை உக்ரைன் மீது ரஷ்யா ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இந்த நிலையில் ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்வது கண்டனத்துக்கும் ஆளாகியிருக்கிறது. இது தொடர்பாக உக்ரைன் எதிர்ப்பை பதிவு செய்தபோதும், இந்தியா தனது முடிவிலிருந்து மாறவில்லை.  

இந்த நிலையில், பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில்  உரையாடினார். இந்த உரையாடல் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. உரையாடலின் போது, புடினிடம் உக்ரைனில் நடந்து வரும் மோதல் சூழ்நிலையில், வன்முறைகளையும் நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்திற்கான பாதையில் செல்ல அழைப்பதாக மோடி தனது கருத்தை முன்வைத்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த நிலைப்பாட்டை அமெரிக்கா மீண்டும் வரவேற்றுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறையின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் கூறும்போது, ‘‘பிரதமர் மோடியின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, அந்தக் கருத்துகள் நடக்கும்போது வரவேற்போம். மற்ற நாடுகள் ரஷ்யாவுடனான ஈடுபாடு குறித்து தாங்களாகவே முடிவெடுக்கும். போரின் பாதிப்புகளைத் தணிக்க கூட்டாளிகளுடன் நாங்கள் தொடர்ந்து ஒருங்கிணைத்து வருகிறோம்” என்று கூறினார். 


Tags : America ,Modi ,Putin , America welcomes Modi-Putin talks
× RELATED ரஷ்ய அதிபர் புடினை போன்று ஜனநாயகத்தை...