சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா நிறைவு நாள் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கலந்துகொண்டு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசுகையில், முதல்வரின் ஆட்சித்திறமையினால் மக்களிடம் நாளுக்கு நாள் கட்சிக்கும், இந்த ஆட்சிக்கும் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அதிமுக ஆட்சியிலிருந்த 5 ஆண்டுகள் அமைச்சராக இருந்தபோது முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், எதையும் பேச மாட்டார். இந்த மாவட்டத்திற்கும், தொகுதிக்கும் உருப்படியாக ஏதும் செய்யாதவர். சிவகங்கையில் கவுரி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் இடத்தை அமைச்சராக இருந்தபோது ஆக்கிரமித்தார். ஆட்சியில் இருந்த போது மக்களுக்கு எதையும் செய்யாத அதிமுக அமைச்சர்களின் ஊழல் குறித்து மக்களுக்கு நன்றாக தெரியும். அதிமுகவால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது, என்றார்.