×

 சென்னை சிஆர்பிஎப் வீரர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு

வாலாஜா: வாலாஜாவில் சென்னை சிஆர்பிஎப் வீரர், பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஏழுமலை(51). இவர் சென்னை ஆவடியில் உள்ள சிஆர்பிஎப் படை பிரிவில் கான்ஸ்டபிளாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வனஜா, வாலாஜா அரசு நிதி உதவி பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு விடுமுறையில் வீட்டுக்கு வந்த ஏழுமலை, குடும்ப தகராறு காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டின் ஒரு அறையில் திடீரென்று தலையில் பெட்ரோலை ஊற்றி  தீ வைத்துக் கொண்டாராம். அவரது அலறல் சத்தம் கேட்டு மகள்  அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தார். வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏழுமலையும், தந்தையை காப்பாற்ற முயன்றதில் லேசான காயமடைந்த மகள் வாலாஜா அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Chennai ,CRPF , Chennai CRPF soldier doused in petrol and set himself on fire
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...