சென்னை: ஆவின் நிர்வாக இயக்குநர் சுப்பையன் நேற்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: நேற்று முதல் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களின் விலை உயர்த்தப்படுகிறது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பு கலக்காத 100 கிராம் வெண்ணெய் ரூ.52லிருந்து ரூ.55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 500 கிராம் ரூ.250 லிருந்து ரூ.260 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உப்பு கலந்த 100 கிராம் வெண்ணெய் ரூ.52 லிருந்து ரூ.55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 500 கிராம் ரூ.255 லிருந்து ரூ.265 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று (நேற்று) முதல் அமலுக்கு வருவதாக அனைத்து ஒன்றியங்களின் பொது மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருந்த நிலையில் புதிய விலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கை யில் தெரிவிக்கப் பட்டுள்ளது.