×

பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகததால் சின்னத்திரை நடிகா் நாஞ்சில் விஜயன் கைது

கடந்த 2020 ஆம் ஆண்டு சூர்யதேவி மற்றும் நடிகர் வணித்ததேவி இடையே ஏற்பட்ட தகராறில் வனிதாவுக்கு ஆதரவாக நாஞ்சில் விஜயன் வீடியோ வெளிட்டார். இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆஜர் ஆகாமல் இருந்த சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயனை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு பிரபல நடிகை வனிதாவுக்கும் திரைப்பட இயக்குனர் பீட்டர்பாலுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் தொடர்பாக பல்வேறு பிரபலங்கள் பல்வேறு நபர்கள் ஆதரவாகவும்,  எதிராகவும்  கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதன் அடிப்படையில் சூரியதேவி என்ற பெண் ஒருவர் வனித்தாதேவி திருமணம் குறித்து கருத்து பதிவிட்டிருந்தார். பல்வேறு அவதூறு கருத்துகள் இருந்தாக, அப்போது வனிதா தேவிக்கும், சூரியதேவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுவந்துள்ளது.

இந்த சமயத்தில் இருவரும் வீடியோ வெளிட்டு வந்துள்ளனர், ஆபாசமாகவும், அவதூறாகவும், இருவர் இடையே வீடியோக்களை வெளிட்டு வந்து இருந்தனர். இந்த விவகாரத்தில் பிரபல சின்னத்திரையை நடிகர் அனா நாஞ்சில் விஜயன் என்பவரரும் கருது தெரிவித்துள்ளார், பிறகு வனிதாவுக்கு ஆதரவாக, சூரியதேவி குறித்து அவதூறாக கருத்து வெளிட்டு வந்துள்ளார். அப்போது இருவர்கிடையா பிரச்சனை ஏற்பட்டுவந்துள்ளது.

இதன் தொடர்பாக சூரிய தேவி காவல் நிலையத்தில் நாஞ்சில் விஜயன் மீது புகார் அளித்து வந்துள்ளார், மேலும் சூரிய தேவியை இதன் தொடர்ந்த விவகாரம் தொடர்பாக நாஞ்சில் விஜயனிடம் கேட்பதற்காக ஆழ்வார்பேட்டை பகுதில் இருக்கக்கூடிய அவரது இல்லதிருக்கு சென்று இருக்கிறார். அப்போது அங்கே நாஞ்சில் விஜயன் மற்றும் சூரிய தேவி அவரது நண்பர் அப்பு ஆகிய இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டதாகவும், அது அப்படியே கைதகராக மாறி, இதில் இருவர் மாறி தாக்கி கொண்டுள்ளனர்.

பின்பு இதன் விவகாரம் தொடர்பாக சூரிய தேவி அப்போது வளசரவாக்கம் பகுதில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதை போல் நடிகர் நாஞ்சில் விஜயன் சென்னை காவல் ஆணைய  அலுவலகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு புகார் அளித்து இருந்தனர். இந்த விவகாரத்தில் சூரிய தேவி அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் நடிகர் நாஞ்சில் விஜயன் மீது 5 வழக்கின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆபாசமாக பேசுதல், ஆயுதத்தை கொண்டு தாக்குதல், ஆகிய ஐந்து பிரிவின் கீழ் நடிகர் நாஞ்சில் விஜயன்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள நிலையில் ஆனால் நடிகர் நாஞ்சில் விஜயன் இந்த வழக்கு விசாரணைக்கு முறையாக ஆஜராகாமல், பல்வேறு காரணங்கள் கூறி தட்டி கழித்ததாக தெரியவந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் பல்வேறு சம்மன்கள் அனுப்பட்டு முறையான விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்கும் நிலையில், இன்று அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்த அவரை வளசரவாக்கம் காவல் நிலையில் வைத்து விசாரித்து மேற்கொண்டு வருகிறார்கள். அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பவும் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறன்றனர்.    


Tags : Vijayan ,Chinnatra Nadhikar Nanj ,Samman , Small screen actor Nanjil Vijayan was arrested for not appearing despite being summoned several times
× RELATED கடந்த 10 வருடங்களில் கேரளாவுக்கு...