வேட்டவலம்: வேட்டவலம் அருகே மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, வீட்டின் வாசலில் வரைந்திருந்த ஆண்டாள் கோலம் காண்போர் மனதை கவர்ந்தது. வேட்டவலம் அடுத்த ஓலைப்பாடி கூட்ரோடு பகுதியில் வசிப்பவர் கலியமூர்த்தி மகள் சூர்யா. எம்.பி.ஏ பட்டதாரியான இவர், நேற்று மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு தனது வீட்டின் வாசலில் ஆண்டாள் மடியில் திருவரங்கன் (பெருமாள்) துயில் கொள்வதுபோல் வண்ண கோலமிட்டிருந்தார். இந்த கோலம் அனைவரது மனதையும் மிகவும் கவர்ந்தது. இதனை, அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் ஆர்வமுடன் நின்று பார்த்து சென்றனர்.