×

புளியந்தோப்பில் பிரபல ரவுடி கொலை: தப்பிய 3 பேர் கும்பலை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைப்பு

அம்பத்தூர்: புளியந்தோப்பில் பிரபல ரவுடியை கொலை செய்த வழக்கில், 3 பேர் கும்பலை  தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சுரேஷ் என்ற கருக்கா சுரேஷ் (45). இவரது மனைவி விமலா (38). பாடி இளங்கோநகர் பகுதியில் மாநகராட்சி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சுரேஷ் மீது புளியந்தோப்பு, வியாசர்பாடி, எம்.கே.பி. நகர் போன்ற காவல்நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் நேற்று காலை விமலா, பாடி இளங்கோநகர் பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளார்.  விமலாவை பார்ப்பதற்காக சுரேஷ்  சென்றுள்ளார். அதன்பிறகு மதியம் இருவரும் சாலையோரத்தில் நின்று பேசிகொண்டிருந்தனர்.  அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில்  மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுரேசின் தலை மற்றும் கழுத்து  உள்ளிட்ட பகுதிகளில் சரமாரி வெட்டிவிட்டு தப்பினர்.  

இதனால் படுகாயமடைந்த சுரேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.  இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொரட்டூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி  மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சுரேஷின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் சுரேசுக்கும், வேறு ஒரு தரப்பினருக்கும் இடையே மோதல் இருந்ததாககூறப்படுகிறது. இதனால் அவர்கள் சுரேஷை வெட்டி கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.  இதனிடையே, ரவுடியை கொலை செய்துவிட்டு தப்பிய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.   இந்த  சம்பவம் புளியந்தோப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Killing of famous rowdy in Pulianthop: 3 escapees organized by police special force to nab the gang
× RELATED ₹60 லட்சம் மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல்: 2 பேர் அதிரடி கைது