விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோயிலில் கார்த்திகை மாதம் கடைசி நாளான இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் தாணிப்பாறை அடிவாரத்தில் குவிந்ததால் மலையேறி சாமியை தரிசிக்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணி வரை மட்டுமே மலையேறி சுந்தர மகாலிங்கத்தை வழிபட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.