புதுடெல்லி: டெல்லியின் உத்தம் நகர் பகுதியில் 17வயது பள்ளி மாணவி தனது சகோதரியுடன் சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது இரண்டு பைக்கில் வந்த மர்மநபர்கள் 17வயது சிறுமி மீது ஆசிட்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்னர். இதனால் அலறி துடித்த சிறுமியை அங்கிருந்தவர்கள் மீட்டு சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து மோகன் கார்டன் போலீசாருக்கு ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.