×

அதிபர் ரணில் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்: இலங்கை தமிழர்களின் பிரச்னைக்கு தீர்வு

கொழும்பு: இலங்கையில்   சிறுபான்மையினரான தமிழர்களின் நலன்களை பாதுகாக்க, அவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண அந்நாட்டு அரசை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் 10ம் தேதி பேசிய அதிபர் ரணில், ``நாட்டின் 75வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுவதற்கு முன் தமிழர்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும்,’’ என்று கூறியிருந்தார்.  இந்நிலையில், கொழும்பில் நேற்று முன்தினம் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில், பங்கேற்ற தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் அனைவரும் வட மாகாணத்தின் கவுன்சிலர் தேர்தலை உடனடியாக நடத்தும்படி அதிபர் ரணிலை வலியுறுத்தினர். கூட்டத்துக்கு பின் நிருபர்களிடம் பேசிய தமிழ் முற்போக்கு கூட்டமைப்பின் தலைவர் மனோ கணேசன், இந்திய வம்சாவளியை சேர்ந்த மலைவாழ் தமிழர்களின் சார்பில் 13ஏ அரசியல் சட்ட திருத்தத்தை முன்மொழியும்படி அதிபர் ரணில் தன்னை கேட்டு கொண்டதாக தெரிவித்தார்.

Tags : President ,Ranil ,Tamils , All party meeting chaired by President Ranil: Solution to the problem of Sri Lankan Tamils
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!