×

கழிவறை சுவராக மாறிய சேலை: கர்நாடகா பள்ளியில் அவலம்

சிவமொக்கா: கர்நாடகா மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பருவே பஞ்சாயத்திற்கு உட்பட்ட எலிகே என்ற குக்கிராமத்தில் அரசுப் பள்ளி செயல்படுகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லை. சேதமடைந்த கழிவறை கட்டிடத்தை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், பள்ளி வளாகத்தில் சேலையை கட்டிவைத்துள்ளனர். அந்த சேலையின் பின்பக்கமாக சென்று மாணவர்கள் இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர்.

மாணவர்களின் பரிதாபமான நிலைமை குறித்து வீடியோ வைரலானதால், மாவட்ட கல்வி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதுகுறித்து 0சிவமொக்கா கல்வித்துறை துணை இயக்குனர் பரமேஸ்வரப்பா கூறுகையில், ‘சேதமடைந்த கழிவறை கட்டிடம் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால், திறந்தவெளி பகுதியை மாணவர்கள் கழிவறையாக பயன்படுத்தி உள்ளனர். உரிய வசதிகள் செய்து தரப்படும்’ என்றார்.

Tags : Karnataka , Saree turned toilet wall: Tragedy in Karnataka school
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...