×

பராமரிப்பு பணி காரணமாக சென்னை-மங்களூரு ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: சென்னை சென்ட்ரல்-மங்களூரு-சாய்நகர் ஷீரடி செல்லும் ரயில்கள் பராமரிப்பு பணி காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை சென்ட்ரலில் இருந்து வழக்கமாக இரவு 8.10 மணிக்கு புறப்படும் தினசரி ரயில் வண்டி எண்(12601) மறுநாள் மதியம் 12.10 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் சென்றடையும்.

இந்த ரயில் இன்று இரவு 9.40 மணிக்கு (ஒரு மணி நேரம் 30 நிமிடம் தாமதம்) சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும். மேலும், டிசம்பர் 17,24,31 ஆகிய தேதிகளில் இரவு 9.25 மணிக்கு (ஒரு மணி நேரம் 15 நிமிடம் தாமதம்) புறப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்படும் வாராந்திர விரைவு ரயில் (வண்டி எண் 22601) மறுநாள் காலை 11.25 மணிக்கு சாய்நகர் ஷீரடி சென்றடையும்.


இந்த ரயில் இன்று காலை 11.20 மணிக்கு ஒரு மணி நேரம் தாமதமாக சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டது. மேலும் டிசம்பர் 21,28 ஆகிய தேதிகளில் மதியம் 12.20 மணிக்கு அதாவது 2 மணி நேரம் தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.




Tags : Chennai ,Mangalore , Change in Chennai-Mangalore train service due to maintenance work: Southern Railway Information
× RELATED கோடை விடுமுறையையொட்டி தாம்பரம்-மங்களூரு சிறப்பு ரயில்