வாஷிங்டன்: மனித உரிமை செயல்பாட்டாளர் ஸ்டேன்சுவாமியின் கணினியில் ஆதாரங்கள் அனைத்தும் ஹேக்கர்களால் தினிக்கப்பட்டதாக அமெரிக்க ஆய்வு அரிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. திருச்சியை, பூர்வீகமாக கொண்ட ஸ்டேன்சுவாமி பழங்குடியினா் உரிமைகளுக்குக்காக குறள் கொடுத்து வந்தாா். கடந்த 2020 ஆம் ஆண்டு பீமா கோரேகான் நினைவு இடத்தில் வன்முறையைத்தூண்டும் வகையில் பேசியதாக கூறி அவரை தேசிய புலனாய்வு அமைப்பு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த வழக்கில் கைதான வழக்கறிஞர்கள், சமுக ஆர்வலர்கள் உள்ளிட்ட 16 பேரின் கணினிகளில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில். பிரதமா் மோடியை கொள்ள மாவோயிஸ்டுகளுடன் சோ்ந்து சதி செய்ததாகவும் தேசிய புலனாய்வு குற்றம்சாட்டியாது.
இந்த வழக்கில் ஜாமீன் மனுவிசாரனையில் இருக்கும் போதே. 2021 ஆம் ஆண்டு சிறையிலேயே மரணம் அடைந்தாா். இந்த நிலையில் ஸ்டேன்சுவாமியின் கணினியில் பல குற்றவியல் அவணங்கள் திணிக்கப்பட்டு இருப்பாதாக அமெரிக்காக தடயவியல் நிறுவனம் அறிக்கை வெளிட்டுள்ளது. அமெரிக்காவை தலைமையாக கொண்டு செயல்பட கூடிய அஸ்வெல் கன்சுலேட்டிங் தடயவியல் வௌியிட்டு இருக்ககும் அறிக்கையில் மாவோயிஸ்ட் கடிதங்கள் என்று அழைக்கப்படும் கடிதங்கள் உட்பட. 44 ஆவனங்கள் 2014 ஆம் ஆண்டு தொடங்கி 2019 ஆம் ஆண்டு சோதனைக்கு உட்ப்படுத்தப்பட்டவரை 5 ஆண்டுகள் ஸ்டேன்சுவாமியின் அனுகிய ஹேக்கர்களாள் தினிக்கப்பட்டுள்ளது என தெறிவிக்கப்பட்டுள்ளது எற்கனவே இந்த வழக்கில் சமுக ஆர்வளா்கள் ரோனாவில்சன் கணினியில் இதுபோன்ற ஆவணங்களை வைத்தாகவும்அஸ்வெல் கன்சுலேட்டிங் வெளியிட்டு இருக்கும் அறிகையில் குறிப்பிட்டுள்ளது.