×

தேனீக்களை போல கொட்டி விடுவோம்: போலீசாருக்கு செல்லூர் ராஜூ மிரட்டல்

மதுரை: மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நேற்று, முனிச்சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமை வகித்து பேசும்போது, ‘‘அதிமுக தொண்டர்கள்தான் கட்சியை உயிரோட்டத்தோடு வைத்துள்ளனர். தியாகிகளையும், தன்னலமில்லாத தலைவர்களை கொண்ட இயக்கம் அதிமுக. கட்சியில் எவ்வளவு பிரிவினைகள் வந்தாலும், தொண்டர்கள் கட்சி மாற மாட்டார்கள். அவர்கள் புடம் போட்ட தங்கங்கள். ஆனால், தலைவர்கள், நிர்வாகிகள் மாறுவார்கள். நாங்கள் எடப்பாடி தலைமையில் ஒன்றாக இருக்கிறோம். இந்த நிகழ்ச்சிக்காக அதிமுகவினர் 4 பிளக்ஸ் பேனர்கள் வைத்தனர். பிளக்ஸ் பேனர் வைத்தால்தான் எதிர்க்கட்சிகாரர்கள். அப்போதுதான் தங்கள் பெயரை அவர்கள் வெளிப்படுத்த முடியும். இதற்காக காவல்துறை அகற்ற முயலக்கூடாது. காவல்துறையினரே.... அதிமுகவை சீண்டிப்பார்க்காதீர்கள். தேனீக்கள் போல நாங்கள் அமைதியாக இருப்போம். பிறகு கொட்டி விடுவோம்’’ என்றார்.


Tags : Sellur Raju , Let's drop like bees: Sellur Raju threatens police
× RELATED பலூன் விளையாட்டும்… குழந்தை செல்லூர் ராஜூம்…