×

பண தகராறில் 40 ஆண்டுகால நண்பர் தாக்கிய சித்த வைத்தியர் பரிதாப மரணம்

சென்னை: விருகம்பாக்கம் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (50), சித்த வைத்தியர். எம்ஜிஆர் நகர் முத்துமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த செக்யூரிட்டி கலியமூர்த்தி (54). இருவரும் 40 ஆண்டுகால நண்பர்கள். இந்நிலையில், கலியமூர்த்தி ரூ.50 ஆயிரத்தை சித்த வைத்தியர் கார்த்திகேயனிடம் கொடுத்து வைத்திருந்தார். கடந்த 8ம் தேதி இரவு சித்த வைத்தியரை பார்த்த கலியமூர்த்தி அவசர தேவைக்காக தனது ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்து உருட்டுக்கட்டையால் கார்த்திகேயன் தாக்க முயன்றபோது, அதை பிடுங்கி அவரது தலையில் ஓங்கி அடித்தார் கலியமூர்த்தி.

படுகாயம் அடைந்த அவர் கீழே விழுந்தார். அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கார்த்திகேயனை அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து, விருகம்பாக்கம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கலியமூர்த்தியை கைது செய்தனர். இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக கார்த்திகேயன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். எனவே, போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chitta Vaidya , Chitta Vaidya died tragically after being assaulted by his friend of 40 years in a money dispute
× RELATED பண தகராறில் 40 ஆண்டுகால நண்பர் தாக்கிய சித்த வைத்தியர் பரிதாப மரணம்