தஞ்சை : தஞ்சை நீலநாதப் பிள்ளையார் கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தஞ்சை நீலநாதப் பிள்ளையார் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து 24 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், விளக்க நோட்டீஸ் அனுப்பி உரிய சட்டநடைமுறைகளை பின்பற்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.