×

கள்ளக்குறிச்சி மாவட்டம் கண்டாச்சிமங்கலம் கிராமத்தில் மணிமுக்தா ஆற்றில் வெள்ளம்; 4 பேர் தவிப்பு..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கண்டாச்சிமங்கலம் கிராமத்தில் மணிமுக்தா ஆற்றின் கரையை கடக்க முடியாமல் 4 பேர் தவித்து வருகின்றனர். ஆற்றில் திடீரென அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் மேய்ச்சலுக்கு சென்ற 4 பேர் கரை திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். நேற்று காலை சென்றவர்கள் உணவு ஏதுமின்றி கரை திரும்பாமல் இருக்கும் நிலையில் கயிறு மூலமாக மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Manimughta ,Kandachimangalam ,Kallakkirichi district , Kallakurichi, Manimukta river, flood
× RELATED விழுப்புரம், கள்ளக்குறிச்சி...