வாரணாசி: உத்தர பிரதேசத்தில் காசி தமிழ் சங்கமத்தின் விழா நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக 8 நாட்கள் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.இதனைத் தொடங்கி வைத்து பேசிய ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ``இலக்கியம், கலாச்சாரம் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. காசி தமிழ் சங்கம நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த பிரதமருக்கு நன்றி.
இதன் மூலம் `ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற தொலைநோக்குப் பார்வை உணர்த்தப்படுகிறது. தமிழகத்தில் இருந்து காசி தமிழ் சங்கமத்திற்கு வந்துள்ள தமிழக விளையாட்டு வீரர்களிடையே உற்சாகம் காணப்படுகிறது. இதன் மூலம் வடக்கு, தெற்கு பிராந்தியங்கள் இணைக்கப்படுகின்றன. அவற்றின் பாரம்பரியம் பிரதிபலிக்கிறது,’’ என்று தெரிவித்தார்.