திருவனந்தபுரம்: சபரிமலையில் நாள் ஒன்றுக்கு 90 ஆயிரம் பேரை மட்டுமே அனுமதிக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. மண்டல பூஜைகளுக்காக கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் திறக்கப்பட்டது. அதன் பின்னர் நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில் தேவசம்போர்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.