×

வேதாரண்யம் அடுத்த குரவப்புலம் கிராமத்தில் 1500 பாரம்பரிய நெல் விதைகள் பயிரிட்டு பட்டதாரி அசத்தல்-தமிழக முதல்வர் இளைஞர் விருதுவழங்கி பாராட்டு

வேதாரண்யம் : நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலம் கிராமத்தில் 1500 வகை பாரம்பரிய மருத்துவ குணம் கொண்ட நெல் வகைகளை பயிரிட்டு அதனை சேகரித்து வைத்து உள்ளார் பட்டதாரி.தமிழகத்தில் நம்மாழ்வார் வழியை பின்பற்றி பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் மீட்டெடுப்புகளை தமிழக அரசு அங்கீகரித்தது. அவரது மறைவுக்குப் பின் தற்போது கடந்த 2015 ஆண்டு முதல் வேதாரண்யம் தாலுகா குரவப்புலத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி சிவரஞ்சனி சித்த மருத்துவர்சரவணகுமரன் தம்பதியர் இந்தியாவில் பல மாநிலங்களுக்கு சென்று மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய 1500வகையான நெல் ரகங்களை சென்ற ஆண்டு வரை மீட்டெடுத்துள்ளனர்.

அதனை தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் விளை நிலத்தில் பாத்திகள் அமைத்து அவற்றை அடையாளப்படுத்தி ஒவ்வொரு பாத்தியிலும் ஒவ்வொரு வகையான நெல்மணிகளை விதைத்து. அதனை அறுவடை செய்து பாதுகாத்து வருகிறார்கள். இவர்களது மீட்டெடுப்புகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மாநில அரசு தமிழ்நாடு முதலமைச்சர் மாநில இளைஞர் விருதும் 2022 அறிவித்து. இந்தவிருதினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் சிவரஞ்சனியை பாராட்டி தனது விருப்ப நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் வழங்கினார்.

மேலும் வேளாண் செம்மல், நம்மாழ்வார் விருது, ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்1250 நெல்வகைகளை மீட்டெடுத்த இந்த தம்பதியினர், இந்த ஆண்டு மேலும் 250 ரக நெல் விதைகளை சேமித்து 1500 ரக நெல் விதை 5 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்துள்ளனர். இவரது வயல்களில் மருத்துவ குணம் நிறைந்த தமிழ்நாட்டு நெல் ரகங்களான கருங்குறுவை, மாப்பிள்ளை சாம்பா, குடவழை, ஓட்டம் கருப்பு கவுணி, நவரா, பூங்கார், இரத்த சாவி, காலாநமக் ஆகிய நெல்வகைகளும் மேற்கு வங்க மாநில நெல்வகைகளான இராமல்லி, ஓரகழமா, ராஜகழமா, கேரளா நெல்வகைகளான ஜெகன்னாத் போக், ஒரிசா புல், கர்ணாபுல்,இவர் சாகுபடி செய்துள்ள நெல் வயல்களை ஏராளமான விவசாயிகளும், விவசாய துறை அதிகாரிகளும் பார்வையிட்டு செய்கின்றனர். அழிந்து வரும் நெல் ரகங்களை பாதுகாக்க தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக கடும் முயற்சி செய்தவரும் இந்தம்பதிகளின் செயல் பாராட்டுக்குரியதாகும்.



Tags : Kuravapulam village ,Vedaranyam , Vedaranyam : 1500 varieties of traditional medicinal rice in Kuravapulam village next to Vedaranyam in Nagapattinam district.
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்