டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதியாக தீபங்கர் தத்தா பதவியேற்றுக் கொண்டார். தீபங்கர் தத்தாவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது. மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபங்கர் தத்தா 2030 பிப். வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகிப்பார்.