சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே வடபட்டியை சேர்ந்தவர் டி.ராதாகிருஷ்ணன் (67). இவர் 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் மக்களவைத் ெதாகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதிமுகவில் 30 வருடங்களுக்கு மேலாக பல்வேறு பதவிகள் வகித்துவந்த இவர், தற்போது விருதுநகர் மேற்கு மாவட்ட துணை செயலாளராக இருந்தார். இந்நிலையில் நேற்று மாலை திடீரென நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.