×

சென்னையில் காலியாக உள்ள மெயில் மோட்டார் பிரிவு வேலைக்கு விண்ணப்பிக்கலாம்: அஞ்சல் துறை அறிவிப்பு

சென்னை: சென்னையில் அஞ்சல் துறையில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், மெயில் மோட்டார் சேவையில் திறமையான கைவினைஞர் பணிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு ஜனவரி 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இது குறித்து அஞ்சல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது: சென்னையில் உள்ள அஞ்சல் துறை மெயில் மோட்டார் சேவையில் திறமையான கைவினைஞர்( மெக்கானிக், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட)  பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஒரு வருட பணி அனுபவம் உடையவர்கள் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க  18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும், அரசு பணியாளராக இருந்தால் அதிகபட்சம் 40 வயது வரையும், எஸ்.சி பிரிவினருக்கு 5 வருடமும், ஓபிசி பிரிவினருக்கு 3 வருடமும் சலுகை வழங்க்கப்பட்டுள்ளது. குரூப்- சி பிரிவில் இடம்பெறும் இந்த பணிகளுக்கு ரூ.19,000 முதல் 63,200 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வுக்கான பாடத்திட்டம், தேதி மற்றும் இடம் குறித்து  நுழைவு சீட்டு வழங்கும் போது தெரிவிக்கப்படும். இந்த பணிகளுக்கான விண்ணப்பத்தை www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 2023ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதிக்குள் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள மெயில் மோட்டார் சேவை அலுவலகத்துக்கு விரைவு தபால் அல்லது பதிவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

Tags : Mail Motor ,Chennai , Apply for Mail Motor Division Job Vacancy in Chennai: Department of Posts Notification
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...