செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு பேருந்து, நிலை தடுமாறி கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். நாமக்கல் சென்ற அரசு பேருந்து நிலை தடுமாறி சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்திற்குள்ளானது. சிகிச்சைக்காக அனைவரும் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.