×

மாண்டஸ் புயலால் மெட்ரோ ரயில் நிலையங்களில் ரூ.3.45 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

சென்னை: மாண்டஸ் புயலால் மெட்ரோ ரயில் நிலையங்களில் ரூ.3.45 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமாகியுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோயம்பேடு, ஈக்காட்டுதாங்கல், சின்னமலை, கிண்டி ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களின் மேற்கூரைகள் புயலால் சேதமாகியுள்ளது. அண்ணா நகர், அரும்பாக்கம், ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் வழிகாட்டி பலகைகள், இதரப் பொருட்கள் சேதமாகியுள்ளது. 


Tags : Mandas , Goods worth Rs 3.45 crore damaged in metro stations due to Cyclone Mandus
× RELATED காசிமேட்டில் 300க்கும் மேற்பட்ட படகுகள் சேதம்