×

சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் குன்னூர் சிம்ஸ் பூங்கா வெறிச்சோடியது

குன்னூர் : சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் குன்னூர் சிம்ஸ் பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது.நீலகிரி மாவட்டம் குன்னூரில் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்காவை காண தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது.

அவ்வப்போது கன மழை பெய்வதோடு, கடும் குளிரும் நிலவுவதால் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
மேலும்  தொடர் மழை காரணமாக குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட ‌சுற்றுலா தலங்களில் பயணிகள்  வருகை குறைந்து  வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் படகு இல்லத்தில் படகு சவாரி மேற்கொள்ள சுற்றுலா பயணிகள் இல்லாததால் படகு இல்லம் மற்றும் குழந்தைகள் விளையாட்டு பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி கடைகள் வைத்துள்ள சாலையோர வியாபாரிகள் மற்றும் விடுதி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.



Tags : Gunnur Sims Park , Coonoor : Coonoor Sims Park is deserted due to reduced number of tourists. Sims in Coonoor, Nilgiri district.
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்கா ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!