நாகப்பட்டினம்: மாண்டஸ் புயல் காரணமாக கோடியக்கரையில் 200 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. இதனால் 200 அடி தூரத்திற்கு சகதி நிறைந்து காணப்படுகிறது. கோடியக்கரைவனப்பகுதியில் பலத்த தரைக்காற்று வீசி வருகிறது. வேதாரண்யம் பகுதியில் கடும் குளிர் நிலவி வருவதால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கினர்.