×

சேதமடைந்த பாதை விரைவில் சீர் செய்யப்படும்: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தகவல்

சென்னை: சேதமடைந்த பாதை விரைவில் சீர் செய்யப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே இன்று இரவு கரையை கடக்கிறது. மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மெரினா கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. மெரினா, காசிமேடு கடல் பகுதியில் அலைகள் ஆக்ரோஷமாக எழுந்து வருகின்றன. கடல்  சீற்றத்தால், மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, மாற்றுத்திறனாளிக்கான பாதையை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் சேதமடைந்த பாதை விரைவில் சீர் செய்யப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; மாண்டஸ் புயலினால் நேற்று முதல் தொடரும் கடல் அலை சீற்றத்தால் சிறப்பு பாதை சேதமடைந்துள்ளது. ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேதமடைந்த பாதை விரைவில் சீர் செய்யப்படும் இவ்வாறு கூறினார்.


Tags : Chennai Corporation ,Mayor ,Priya , Damaged road will be repaired soon: Chennai Corporation Mayor Priya
× RELATED தமிழகத்தில் 188 இடங்களில் தண்ணீர்...