×

சென்னை மாநகர காவல்துறையில் 6 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்: கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவு

சென்னை: சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகர காவல்துறையில் மாதவரம் சட்டம் -ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த கலைராஜ் யானைக்கவுனி சட்டம் -ஒழுங்கு பிரிவுக்கும், யானைக்கவுனி சட்டம் -ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த அலெக்ஸ் கே.கே.நகர் சட்டம் -ஒழுங்கு பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதுபோல, விபசார தடுப்பு பிரிவு-1ல் இன்ஸ்பெக்டர் லட்சுமி துறைமுகம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், ஓட்டேரி குற்றப்பிரிவில் இன்ஸ்பெக்டராக இருந்த மூர்த்தி ராஜமங்கலம் சட்டம் -ஒழுங்கு பிரிவுக்கும், திருவொற்றியூர் குற்றப்பிரிவில் இன்ஸ்பெக்டராக இருந்த சிதம்பர பாரதி மீன்பிடி துறைமுகம் சட்டம் -ஒழுங்கு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடி துறைமுகம் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த ப்ரான்வின் டானி காத்திருப்போர் பட்டியலுக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Metropolitan Police ,Commissioner ,Shankarjeewal , Transfer of 6 Inspectors in Chennai Metropolitan Police: Commissioner Shankarjeewal orders
× RELATED சென்னை விமான நிலையத்தில் “விமான நிலைய...