மதுரை: மதுரை மத்திய சிறையில் பலகோடி ரூபாய் ஊழல் புகார் எழுந்த நிலையில் 12 அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிறை அலுவலக கண்காணிப்பாளர் உட்பட 12 பேரை மாற்றி சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி நடவடிக்கை எடுத்துள்ளார். கைதிகளுக்கு வழங்கப்படும் பொருட்களை வெளிச்சந்தையில் விற்று பல கோடி ஊழல் செய்ததாக புகார் எழுந்தது.