சென்னை: EMIS-ல் பதிவு செய்த மாணவர்களுக்கு மட்டுமே அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு, அரசு உதவி பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை சரிபார்த்து டிச.16க்குள் பதிவேற்ற வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை, விவரங்களில் தவறு இருந்தால் டிச.16க்குள் திருத்தவும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.