சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் பைக் மோதி இளைஞர் உயிரிழந்தார். பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த தாம்பரத்தைச் சேர்ந்த முனியப்பன் (21) உயிரிழந்த நிலையில் பைக்கை ஓட்டி வந்த அன்புமணி (21) காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.