×

ஜி-20 மாநாடு ஆலோசனையில் பங்கேற்கிறேன்: எடப்பாடி தகவல்

சென்னை: பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், ஜி-20 ஆலோசனையில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜி-20 தலைவர் பதவியை நமது நாடு பெற்றிருப்பது உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும். மேலும் ஜி-20 தலைமைப் பொறுப்பு என்பது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய அளவுக்கு பெருமைக்குரியதாகும். பிரதமர் தலைமையில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக டெல்லியில், ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ள ஜி-20 பூர்வாங்க ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் நான் கலந்து கொள்வதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : G-20 Summit ,Edappadi , Participating in G-20 Summit Consultation: Edappadi Information
× RELATED எடப்பாடி தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம்