மயிலாடுதுறை: சங்கரன் பந்தல் வீரசோழன் ஆற்றிலிருந்து உடைப்பு ஏற்பட்டதால் அரசு மேல்நிலைப்பள்ளியில் தண்ணீர் புகுந்தது. தரங்கம்பாடி வட்டம் சங்கரன்பந்தலில் வீரசோழன் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் உடைப்பு ஏற்பட்டது. சங்கரன் பந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி வழக்கம் முழுவதும் ஆற்று நீர் உட்புகுந்து குளம்போல் தேங்கியுள்ளது. தண்ணீர் தேங்கியதால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. உடைப்பை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.