புதுடெல்லி: ஊட்டி அரசு கலை கல்லூரி என்சிசி., மாணவி புது டெல்லியில் நடந்த பாரா முகாமில் போர் விமானத்தில் பயணித்து 2 கிலோமீட்டர் உயரத்திலிருந்து பாராசூட் மூலம் வானில் குதித்து சாதனை படைத்துள்ளனர். புதுடெல்லியில் உள்ள ஆக்ராவில் நடந்த பாரா முகாமில் தமிழகத்திலிருந்து பங்கேற்ற ஊட்டி அரசு கலை கல்லூரியில் மூன்றாம் ஆண்டு சுற்றுவிலாவியல் படிக்கும் என்சிசி., மாணவி கோகிலவாணி இந்திய விமானப்படை விமானத்தில் பயணித்து 1.5 கிலோ மீட்டர் இருந்து 2 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் முதல் மாணவியாக குதித்து சாதித்துள்ளார்.