சென்னை: புழல் மகளிர் சிறையில் வெளிநாட்டு பெண் கைதிகள் 2 பேர் தாக்கியதில் பெண் காவலர் கோமளா காயம் அடைந்துள்ளார். கைதிகளிடையே ஏற்பட்ட தகராறை தடுக்கச் சென்றபோது பெண் காவலர் கோமளாவை தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார். காவலர் கோமளா புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.