சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுதால் தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புயுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.