புதுடெல்லி: மாற்றுத்திறனாளிகள் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில்,‘‘அரசு மாற்றுத்திறனாளிகள் நலனிலும் அக்கறை கொண்டுள்ளது. ஒன்றிய அரசு அணுகல் தன்மையில் சமமான கவனம் செலுத்துகின்றது. முதன்மையான திட்டங்கள் மற்றும் அடுத்த தலைமுறை கட்டமைப்பை உருவாக்குவதில் இது பிரதிபலிக்கின்றது. மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வருவதற்கான அடித்தள நிலையில் பணிபுரியும் அனைவரையும் நான் அங்கீகரிக்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.