ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அடுத்துள்ள பாம்பன் பாலம் அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளது. ராமநாதபுரத்திலிருந்து இருந்து ராமேஸ்வரத்திற்கு 15 பயணிகளுடன் வந்த திருப்பூர் அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. காயங்கள் இன்றி பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.