சென்னை: திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணியின் நூற்றாண்டு விழாவையும் நாம் நடத்துவோம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். கலைஞர் மறைவுக்கு பிறகு தைரியத்தையும் தெம்பையும் எனக்கு ஊற்றியவர்தான் ஆசிரியர் கி.வீரமணி என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தலைவர், போராட்டக்காரர், எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் கி.வீரமணி என்று முதல்வர் கூறியுள்ளார்.