மதுரை : காந்தி கிராம பல்கலைக்கழக பதிவாளர் பதவி நீட்டிப்புக்கு தடை கோரிய வழக்கில் பல்கலைக்கழகம் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழக விதிகளுக்கு முரணாக தனது பதவியை தானே நீட்டித்து சிவகுமார் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த குருநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.