டெல்லி : வரும் ஜனவரியில் மாருதி சுசூகி கார்களின் விலை உயர்த்தப்பட உள்ளதாக நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இடுபொருட்களின் விலை உயர்வால் உற்பத்தி செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்வு என மாருதி சுசூகி அறிவித்துள்ளது. அண்மையில் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப கார்களில் மாற்றம் செய்யப்படுவதாலும் விலை உயர்கிறது.