×

தமிழகத்தின் அனைத்து சிறைகளிலும் நூலகத்திற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தக்கோரிய வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: தமிழகத்தின் அனைத்து சிறைகளிலும் நூலகத்திற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தக்கோரிய வழக்கு குறித்து தமிழக உள்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த சகா என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு ஆணையிட்டது. பல நேரங்களில் சிறைவாசிகளின் உளவியல் சிக்கல்களுக்கு தீர்வாக நூலகங்கள் உதவும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.


Tags : ICOART Branch ,Tamil Nadu , Tamil Nadu, Jail, Library, Infrastructure, iCourt Branch
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...