×

குரூப்-2, 2A முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய TNPSC அறிவுறுத்தல்

சென்னை: கடந்த 21.05.2022 அன்று நடத்தப்பட்ட குரூப்-2, 2A முதல்நிலைத் தேர்வு முடிவுகளின்படி முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல்  சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துகொள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 21.05.2022 அன்று நடத்தப்பட்ட குரூப்-2, 2A முதல்நிலைத் தேர்வு முடிவுகளின்படி முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல்  சான்றிதழ்களை 17.11.2022 முதல் 16.12.2022 வரை இ-சேவை மையங்கள் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில்கொண்டு, அனைத்து  தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன இ-சேவை மையங்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேவைப்படும் இ-சேவை மையங்களில் கூடுதல் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, விண்ணப்பதாரர்கள் இதனை பயன்படுத்தி தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான உதவிக்கு அரசு கேபிள் டிவி நிறுவன கட்டணமில்லா தொலைபேசி எண் : 1800 425 2911 –ஐ தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Group-2, 2A Main Exam, Original Certificate, TNPSC Instruction
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...