கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வனப்பகுதியில் ஒரு பெண் யானை உயிரிழந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உன்சேபச்சி கொல்லை பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடல் மீட்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் மூலம் யானைக்கு உடற்கூறாய்வு நடத்த வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி உத்தரவிட்டுள்ளார்.